சன் சீ கப்பல் அகதிகளுக்கு கனடாவில் அகதி அந்தஸ்து: விசாரணை முடிவில் நேற்று அறிவிப்பு
"சன் சீ" கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டின் அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வருடம் "சன் சீ" கப்பல் மூலம் இலங்கைத் தமிழ் அகதிகள் 490பேர் கனடாவைச் சென்றடைந்தனர்.
குறித்த கப்பலில் சென்றடைந்த இலங்கைத் தமிழர் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றும், புலிகளுடன் தொடர்பைப் பேணிவந்தனர் என்றும் கூறிய அந் நாட்டு அரசு அகதிகளுக்கான விசாரணை சபை ஒன்றை அமைத்து அவர்களால் கோரப்பட்ட அகதி அந்தஸ்து தொடர்பாக விசாரணைகளை நடத்திவந்தது.
இந்நிலையில் நேற்று அவர்களுக்கான விசாரணைகள் முடிவுற்றன. குறித்த கப்பலில் சென்ற அகதிகள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய காரணத்தை வைத்து அவர்களை அந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தீர்மானிக்க முடியாது என அகதிகளுக்கான விசாரணை சபை தீர்ப்பு வழங்கியது.
திகதி:08 03 2011 - 02:27:31 நிருபர்:001
புலிகளே கப்பலில் ஆட்களை கடத்துவதில் ஈடுபடுகின்றனர்
புலிகள் போரில் தோற்றதன் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடாவிலுள்ளவர்களுக்கும் இந்நடவடிக்கையில் தொடர்புண்டு எனத்தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி "நசனல்போஸ்ற்' என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திகதி:16 02 2011 - 03:34:40 நிருபர்:001
இலங்கையர்களுடனான கப்பல் அவதானத்துடன் கனடா அரசு
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இணைவதாக வெளியான தகவல்கள் குறித்தும், இலங்கை அகதிகள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக்டொவ்ஸ் தெரிவித்துள்ளார்.
திகதி:21 01 2011 - 05:06:15 நிருபர்:001
|