|
ஒரு கூச்சலும் இன்னொரு கூச்சலும்
::: அமரர் கல்கி கொழும்பிலுள்ள தமிழர்கள் பகலெல்லாம் அவரவர் தொழிலைக்
கவனிக்கிறார்கள்; அஸ்தமித்ததும் சங்கங்களிலும் பிரசங்களிலும் ஈடுபடுகிறார்கள். கொழும்பிலே தமிழர் நடத்தும் எவ்வளவு சங்கங்கள் ருக்கின்றன தெரியுமா! நானும் பார்த்தாலும் பார்த்தேன்; பொறுமையுடன் பிரசங்கம் கேட்கிறதிலே லங்கையிலுள்ள நமது
தமிழ்ச் சகோதரர்களுடன் போட்டியிட யாராலும் முடியாது!
ஆனால் ப்படியெல்லாம் சங்கங்களிலும், பிரசங்கங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்களே, வர்களுக்குக் கஷ்டமே ஒன்றும் கிடையாதா என்று நினைக்க வேண்டாம்.
அரசியல் சம்பந்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் அவர்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் ருக்கின்றன. ஆனால் அந்தக் கஷ்டங்களை மறப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வழி ருக்கிறது. ஒரு
கஷ்டத்தைப் பற்றி அவர்கள்
நினைத்துக் கொண்டிருக்கும்போதே ன்னொரு கஷ்டம் வந்து
விடுகிறது. ரண்டாவது தொல்லையில் முதல் தொல்லையை மறந்து
விடுகிறார்கள். இன்று
காலையில் தான் ஒரு
சிநேகிதர் ஒரு கதை சொன்னார். ஒரு மனுஷனுக்கு இரட்டைக் குழந்தை
பிறந்ததாம். அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கு அனுதாபம் சொல்வதற்காக வந்தாராம். அடாடா!
இரண்டு குழந்தையும் சேர்ந்து அசாத்தியக் கூச்சலாயிருக்குமே? எப்படித்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறாயோ? என்றாராம். அதற்கு,
இரட்டைக் குழந்தையின் தகப்பனார், அதெல்லாம் இல்லை. ஒரு
குழந்தையாயிருந்தால் தான் கூச்சல் தொந்தரவு. இப்பொழுது ஒரு குழந்தையின் கூச்சல் ன்னொரு குழந்தையின் கூச்சலில்
மறைந்துவிடுகிறது என்று சொன்னாராம். அந்த மாதிரிதான் இலங்கையிலுள்ள நமது சகோதரர்களும் பின்னால் வரும் கஷ்டத்தில் முன்னால் வந்த கஷ்டத்தை மறந்து விட்டிருக்கிறார்கள்!
- வானதி பதிப்பகத்தின் கண்டேன் இலங்கையை புத்தகத்திலிருந்து...
|