தமிழீழத்தைப் பெற்றுக்கொடுக்கராஜீவ்காந்தி விரும்பினார்பரமரகசியத்தை வெளியிட்டார் கலைஞர்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கருணாநிதி இதனை தெரிவித்திருக்கிறார்.
திகதி:18 05 2012 - 01:39:47 நிருபர்:001
ஈழத் தமிழர்களுக்காக நினைவுச்சுடர்ஏந்த அணிதிரளுமாறு வைகோ அழைப்பு
மே 20 ஆம் திகதி ஈழத் தமிழர்களுக்காக நினைவுச்சுடர் ஏந்தி சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று கூடுமாறு தமிழ் மக்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பை விடுத்துள்ளார்.
திகதி:18 05 2012 - 01:35:51 நிருபர்:001
சரத் பொன்சேகா விடுதலைக்கு அமைச்சரவை சம்மதம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர கூறுகிறார்.
திகதி:18 05 2012 - 01:22:54 நிருபர்:001
நவநீதம்பிள்ளைக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறது கொழும்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தனக்குரிய அதிகாரத்தை மீறி செயற்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் இலங்கை இதுதொடர்பாக உத்தியோக பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக இலங்கைக்கெதிராக ஜெனீவாவில் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் குறித்த விவகாரத்தில் தனக்குரிய அதிகாரத்தை நவநீதம்பிள்ளை மீறிவிட்டதாக இலங்கை குற்றஞ்சாட்டுகிறது.
திகதி:08 05 2012 - 03:39:37 நிருபர்:001
மன்னாரில் தமிழரின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றத்திற்கு நடவடிக்கை
வடக்கில் பல பாகங்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டு வரும் அரசாங்கம், தற்போது மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றது.
திகதி:08 05 2012 - 03:37:33 நிருபர்:001
குடாநாட்டில் ரயில் பாதைகளை புனரமைக்கும் பணி ஆரம்பம்
யாழ். குடா நாட்டின்புகையிரதப் பாதைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை இந்திய நட்புறவின் பிரகாரம் நாட்டின் பல பிரதேசங்களிலும் புகையிரதப் போக்குவரத்துத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
திகதி:08 05 2012 - 03:36:00 நிருபர்:001
ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சி அடையும் அபாயம்: ஹர்ஷ டி சில்வா
""ரூபாவின் பெறுமதி மேலும் பன்மடங்கு வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்ட்டுள்ளது. இதனால் உள்நாட்டின் அந்நியசெலவாணி வற்றிப் போய் மொத்த பொருளாதார கூறுகளும் கேள்விக்குறியாகப் போகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் அடிப்படையறிவு கூட அற்றது'' என்று பொருளாதார நிபுணரும் ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினருசான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
திகதி:08 05 2012 - 03:26:54 நிருபர்:001
இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல்போன 600 சிறுவர்கள் பற்றிய தகவல் இன்னமும் இல்லை கவலை தெரிவிக்கிறது பிரிட்டன்
சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மத்தியிலும் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருவதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது பிந்திய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கிறது.
திகதி:04 05 2012 - 02:11:13 நிருபர்:001
யாழ். மே தினக் கூட்டத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இருவரும் அரச ஊடகவியலாளர்கள்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின ஊர்வலத்தின் போது இராணுவ, பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியிலும் புலிக்கொடியை ஏந்தி வந்த அரச ஊடகமொன்றின் இரண்டு ஊடகவியலாளர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருக்கிறார்.
திகதி:04 05 2012 - 02:06:53 நிருபர்:001
மே தினத்துக்கு சென்று திரும்பிய ஐ.தே.க. உறுப்பினர் விபத்தில் பலி
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த கடுகண்ணாவ நகர சபையின் ஐ.தே.க. உறுப்பினர் பஸ் வண்டியில் நசுங்குண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திகதி:04 05 2012 - 01:41:27 நிருபர்:001
ஊடக சுதந்திர தின நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்கள் கௌரவிப்பு
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் சுதந்திர ஊடகக் குரல் அமைப்பினால் இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் அச்சூடகங்களின் ஆசிரியர்கள் ,மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஊடகக் குரல் அமைப்பின் தலைவர் இரா. புத்திரசிகாமணி தலைமையில் இடம்பெற்றது.
திகதி:04 05 2012 - 01:37:30 நிருபர்:001
புலிக்கொடியை வைத்து அரசியல் செய்கிறது இந்த அரசாங்கம்: மனோ கணேசன்
விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம், இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கை தக்க வைத்துகொள்ள இவர்களுக்கு புலி, புலிக்கொடி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் எஞ்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
திகதி:04 05 2012 - 01:35:39 நிருபர்:001
விபுலானந்தரின் 120ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை கல்லடியில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
திகதி:03 05 2012 - 02:46:03 நிருபர்:001
பிரிட்டனின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்கிறது இலங்கை
இலங்கையில் மனிதஉரிமைகள்தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளதற்கு இலங்கை அரசு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
திகதி:02 05 2012 - 02:32:19 நிருபர்:001
ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் இந்த உலகத்தை விட்டு போகமாட்டேன் கருணாநிதி விடாப்பிடி
நான் முன்பு சொன்னது போல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன்.
திகதி:27 04 2012 - 02:45:50 நிருபர்:001
<< முந்தையது 1 2 3 அடுத்தது >>
|