சபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால், அமர்விலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திகதி:30 06 2010 - 06:34:38 நிருபர்:001
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
திகதி:30 06 2010 - 06:33:32 நிருபர்:001
வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து ஐ.தே.க. சபாபீடத்தில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி சபா பீடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
திகதி:30 06 2010 - 06:32:42 நிருபர்:001
யாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு
வடக்கின் நிர்வாக சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திகதி:30 06 2010 - 06:31:02 நிருபர்:001
ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திகதி:30 06 2010 - 06:29:44 நிருபர்:001
சர்ச்சையில் மாநாட்டு பிரகடனம்
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என தமிழ் செம்மொழி் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
திகதி:28 06 2010 - 11:34:42 நிருபர்:001
கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்
விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
திகதி:28 06 2010 - 11:32:09 நிருபர்:001
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம்
தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திகதி:28 06 2010 - 11:25:28 நிருபர்:001
இலங்கை-இந்திய உறவுக்குப் பாலமாக சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம்
இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்குமான கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில், சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திகதி:28 06 2010 - 11:12:30 நிருபர்:001
ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு
ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திகதி:28 06 2010 - 11:11:16 நிருபர்:001
இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை வருகை : ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.
திகதி:28 06 2010 - 11:09:36 நிருபர்:001
ஜனாதிபதி நாளை உக்ரேய்ன் பயணம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை உக்ரேய்னுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திகதி:28 06 2010 - 11:08:40 நிருபர்:001
முறையான அழைப்பு விடுத்தால் ஒற்றுமை குறித்து பேசத் தயார்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் முறையான அழைப்பு விடுக்கப்படின் அது குறித்து பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது. எனினும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக் கொள்கின்றாரா என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
திகதி:28 06 2010 - 11:07:23 நிருபர்:001
23-27 ஆம் திகதி தமிழ் நாட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு செம்மொழி என்ற நாமம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 23ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 27ஆம் திகதி வரை மாநாடு நடைபெறுகிறது.
23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தமிழ் நாட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு செம்மொழி என பெயர் சூட்ட வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திகதி:27 06 2010 - 03:43:02 நிருபர்:001
பழைமைமிக்க இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன : பேரா. ஜோர்ஜ் ஹார்ட்
உலக மொழிகளிலே, தமிழில் மாத்திரமே செம்மையானதும் பழைமையானதுமான இலக்கியங்கள் உள்ளன என பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
திகதி:27 06 2010 - 03:42:33 நிருபர்:001
|